இல்லத்தில் என்றும் நீ இருக்க
இன்பம் நிறைந்து நிலைத்திடும்!
அல்லல் படும் பக்தர் கண்டு
அன்னை போல் காத்திடுவாய்!
வல்லபம் தந்து அருள் செய்வாய்
வளம் தந்து வாழ்ந்திடுவாய்!
நல்லதே நினைத்து நாளும் சிறக்க
நல்ஒளி காட்டி அருள்வாய்.