அமிழ்தம் உண்டவர் அழியாதது போல்
தொன்மை மொழி தமிழ் மொழி
மேகத் திரை கொண்டு மூடினாலும்
சூரியக் கதிராய் கிழித்து வரும்
கடல்நீர் கரித்தாலும் மேகம்
உண்டு
மழை நீராய் கொட்டுவது போல
கடினமான மரபுக்குள் ஒளிந்து இருந்து
மக்கள் வாழ வழிகாட்டும்
கரும்பின் சுவை மறைந்து இருக்கும்
கடித்து உண்ண இனிப்பு ருசிக்கும்
பார்க்கும்போது கடினம் தருவது
படிக்கும் போது இனிமை தரும்
முட்கள் பல செடியில் இருந்தாலும்
மலரை முயன்று பறிப்பது போல்
கடினம் என கருதாமல் சென்று
கல்வி மலரை பறிக்க வேண்டும்
ஆழமான கிணற்றில் கூட முயன்று
அடி நீரை எடுப்பது போல
முயற்சி என்னும் ஆழம் கொண்டு
அறிவு வளர்க்க முயற்சி கொள்வோம்
பாடுபட்டு உழைக்கும் நெற்றித்தண்ணீர்
நிலத்தில் உரமாய் விழுவது போல்
தேடித்தேடி படிக்கும் தமிழ்
கோடி கோடி பலன் தரும்
அன்புடன்
டாக்டர் செந்தமிழ்
வாணி ச மல்லிகா
ஔவையார் மா மன்றம்
நிறுவனத் தலைவி