தெய்வப் புலவர் திருவள்ளுவரே வாழி திருக்குறள் தந்த திருவள்ளுவரே வாழி உய்த்துக் கொடுத்த கொடையே வாழி உயிர் வாழவழி காட்டியே வாழி எய்யாமை போக்கும் ஏந்தலே வாழி ஏட்டை தந்த தடாகமே வாழி அய்யம் அகற்றும் ஈரடியே வாழி அறம் வகுத்த அடியே வாழி உலகப் பொது மறையாய் சுற்றிவந்தாய் ஒரு இடத்தில் தங்கி விட்டாய் உலகில் உயர்ந்த சிலையாக எழுந்து கன்னியா குமரிக் கடலில் நிற்கின்றாய் கலந்த சந்தன மனமாய் பரவி காலம் பல கடந்தும் நிற்கிறாய் வலம் வரும் வசந்தம் போல் வாழ்வு செழிக்க வந்த குறளே! சங்கத் தமிழ் நீ வளர்த்தாய் கடல் சங்கமத்தில் அமைதி கண்டாய் பொங்கும் கடல் அலை கூட தொட்டு தொட்டு சென்று ஓட சங்கு கொண்டு ஊதிய தமிழ் முக்கடல் கூடும் சங்கமத்தில் ஒலித்து பொங்கு தமிழ் பொழிவுடன் எழுந்து முப்பால் புகட்டி புத்துயிர் பெற்றாள்.
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
தெய்வப் புலவர் திருவள்ளுவரே வாழி திருக்குறள் தந்த திருவள்ளுவரே வாழி உய்த்துக் கொடுத்த கொடையே வாழி உயிர் வாழவழி காட்டியே வாழி எய்யாமை போக்கும் ஏந்தலே வாழி ஏட்டை தந்த தடாகமே வாழி அய்யம் அகற்றும் ஈரடியே வாழி அறம் வகுத்த அடியே வாழி உலகப் பொது மறையாய் சுற்றிவந்தாய் ஒரு இடத்தில் தங்கி விட்டாய் உலகில் உயர்ந்த சிலையாக எழுந்து கன்னியா குமரிக் கடலில் நிற்கின்றாய் கலந்த சந்தன மனமாய் பரவி காலம் பல கடந்தும் நிற்கிறாய் வலம் வரும் வசந்தம் போல் வாழ்வு செழிக்க வந்த குறளே! சங்கத் தமிழ் நீ வளர்த்தாய் கடல் சங்கமத்தில் அமைதி கண்டாய் பொங்கும் கடல் அலை கூட தொட்டு தொட்டு சென்று ஓட சங்கு கொண்டு ஊதிய தமிழ் முக்கடல் கூடும் சங்கமத்தில் ஒலித்து பொங்கு தமிழ் பொழிவுடன் எழுந்து முப்பால் புகட்டி புத்துயிர் பெற்றாள்.
ஆண்பெண் பந்தபாச உறவு நீ ! ஆண்டவன் படைத்த கரு நீ !விண் மழையும் பொழிவது தெரியாது? மண்ணில் நீ வருவதும் தெரியாது? கண் இமைக்கும் நேரத்தில் பிறப்பாய் காலம் நேரம் சொன்னாலும் மாறும் பெண் முழுமை அடைவது உன்னால் தாய்மை தந்த சிசு நீ! பத்து மாத பந்தம் நீ! உந்திக் கொடி உறவு நீ! சொத்தாய் வந்த சொர்க்கம் நீ ! துடித்து உறவாடும் உறவு நீ !முத்தாய் வளரும் முழு நிலவு நீ ! முகம் தெரியாத பாசம் நீ! பித்தா இருக்கும் துடிப்பு நீ! பேதை அறியும் புதுஉறவு நீ! இரத்த உறவு பந்தம் நீ! சுகம் தரும் சுகந்தம் நீ! வரவாய் வரும் வாழ்வு நீ! வாழும் வாழ்வின் அர்த்தம் நீ !திரவியமாய் வந்த பொன் நீ! திடத்தை கொடுக்கும் குழந்தை நீ !வரமாய் வந்த வரவு நீ! வளம் கொடுக்கும் வசந்தம் நீ.
செய்யும் தொழிலே தெய்வம்” நாம் எந்த தொழில் செய்தாலும் அந்த தொழிலை முழு மனதுடன் நேசித்து செய்யும் போது அந்த தொழிலே நம்மை உயர்த்தும். ஒரு தொழில் செய்யும் போது அதில் ஒரு மூலதனமாக பொருளோ அல்லது உழைப்போ இருக்கும். ஒரு தொழில் செய்ய தொடங்கும் நாம் கவனிக்க வேண்டியது. அந்த தொழில் உடனே லாபம் தருமா! என்று சிந்திக்க வேண்டும். உடனே லாபம் தரும் என்ற எண்ணம் கொள்ளாது…. பொறுமையாக, நேர்மையாக, உண்மையாகத் தொடர்ந்து உழைக்கும் போது எந்த துறையாக இருந்தாலும் அதில் ஒரு நாள் வெற்றி காண முடியும். ஒரு சிறிய தடைகளும் அல்லது துன்பமோ வரும்போது துவண்டு விடக்கூடாது. ஒரு சிறு தோல்வியைக் கூட தாங்க கூடிய மனப்பக்குவம் பலருக்கும் இல்லாமல் இருக்கும். அப்போது அவர்கள் மிகவும் துவண்டு போய்விடுவார்கள். அந்த சூல்நிலையில் பக்குவப்பட வேண்டும். ஒரு தோல்விக்கு பல காரணங்கள் இருக்கலாம். அது என்ன என்று…
சாதனையாளர்களைப் பார்த்து நாம் வியக்கும் ஒரு விசயம் இவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள். என்னால்… சாதிக்க முடியவில்லை. என்ற எண்ணம் தான் முன் வைக்கப்படும். சாதனையாளர்கள் ஒரே நாளில் எதையும் சாதித்து விடுவதில்லை. அவர்களின் முயற்சி, உழைப்பு அவர்களின் பின்னால் இருக்கிறது. ஒரு செயலை செய்ய அவர்கள் எண்ணியவுடன் செய்து இருப்பார்கள். அதை தள்ளி போட மாட்டார்கள். அதற்கான நேரத்தை ஒதுக்கி அந்த முயற்சியில் முழு மனதுடன் ஈடுபடுவார்கள். அந்த ஈடுபாடு அவர்களை சாதனையாளராக ஆக்கி இருக்கும். நம்மில் எத்தனை பேர் ஒரு வேலையை செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டு நாளை செய்யலாம், அல்லது நாளை மறுநாள் செய்யலாம், என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம் .பிறகு அந்த செயலைச் செய்யவே மாட்டோம். மறந்திருப்போம். சிலர் நாம் இந்தத் துறையில் சாதிக்க வேண்டும் என்று ஒரு பட்டியலை போட்டு வைத்திருப்பார்கள். அதை செய்ய முதலில் ஆர்வத்துடன் செய்வார்கள். பிறகு அதை…
ஒரு குழந்தை பூமியில் பிறந்தவுடன் தனக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பது அதற்குத் தெரியாது. ஆனால் ,பசித்தவுடன் பால் குடிக்க வேண்டும் என்ற உணர்வு அந்தக் குழந்தைக்கு இறைவன் இயல்பாக கொடுத்திருக்கிறான். பசித்த உடன் பால் குடிக்கிறது. குழந்தை வளர… வளர தனக்கு இது வேண்டும், அது வேண்டும் என தேவையானவற்றை கேட்டு வாங்கி வளர்கிறது. பின்பு படித்து தொழில் செய்யும் போது தனக்குப் பிடித்ததை தேர்வு செய்கிறதா? என்றால் “ஆம் “என்று சொல்வதை விட “இல்லை” என்று சொல்வது அதிக பேர் இருக்கலாம். ஏன் இந்த நிலை! தனக்கு பிடித்த ஒன்றைத் தேர்வு செய்வதே மனநிறைவான ஒரு வாழ்க்கையாக அமையட்டும். எப்படி தேர்வு செய்வது? என்று யோசனை உங்கள் முன் நிற்கும். நாம் சாதிக்க என்ன செய்யலாம்? முதலில் ஒரு மனிதன் தனக்கு என்ன பிடிக்கும். எந்தத் துறையில் ஆர்வம் அதிகம் என்று தன்னைத்தானே தெரிந்து கொள்ள வேண்டும்.…
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றை பிடிக்கும் கணக்கறி வாரில்லை காற்றை பிடிக்கும் கணக்கறி வாளர்க்கு கூற்றை உதைக்குங் குறியது வாமே” என்று கூறுகிறார் திருமூலர். அதாவது பத்மாசனத்தில் அமர்ந்து. வலது கை மோதிர விரலால் இடது மூக்கை அடைத்து .வலது மூக்கால் காற்றே உள்ளே இழுத்து அடக்கி காட்டை விரலால் வலது மூக்கை அடைத்து பின் மறு மூக்கின் வழியாக வெளியே விட்டு. நாடி சுத்தி போன்ற யோக பயிற்சிகளை செய்பவர்கள் யாராயினும் வயதானாலும் சுறுசுறுப்புடன் காட்சியளிப்பார்கள். அவர்களை கூற்றுவன் நெருங்க மாட்டான் என்று கூறுகிறார் திருமூலர். நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை இரவு பகல் தொடர்ந்து மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம். தன்னிச்சையாக வந்து போய்க் கொண்டிருக்கும் மூச்சை கட்டுப்படுத்தினால். அதிக நாள் உயிர் வாழலாம். மூச்சுக்காற்றை ஒழுங்குபடுத்துதல் சுவாசப் பயிற்சி எனப்படுகிறது. ஒரு நாளைக்கு நம் உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளும் சுத்தமடைகின்றன. சுவாசத்தை உள்ளிழுப்பதுபூரகம்…
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது கல்லணை. திருச்சிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கல்லணையை கட்டியவர் கரிகால சோழ மன்னன் கட்டினார். கரிகாலன் என்பதற்கு கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று. தற்காலத்தில் காவிரியில் அடிக்கடி பெருவெள்ள வரும். ஆனால், அந்த நீர் எதற்கும் பயன்படாமல் கடலுக்கு சென்று விடும். மழை காலங்களில் வெள்ளப்பெருக்காலும் கோடை காலத்தில் நீரின்றி மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதனை தடுக்கும் பொருட்டு பெரியதோர் அணையைக் கட்ட முடிவெடுத்தான் கரிகாலன். எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஒரு காலகட்டத்தில் இந்த கல்லணை கட்டப்பட்டது. அணை கட்டப்பட்ட முறையை சொல்ல வேண்டுமென்றால் காவிரி ஆற்றின் மிகப்பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன அந்தப் பாறையின் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே…
வெயில் நூறு டிகிரியைத் தாண்டி அணல் காற்று வீசிக்கொண்டு இருந்தது சென்னை மாநகரில்.பத்து மணியை காட்டியது கடிகாரம்.ஆட்டோ சத்தம் அடங்கி சிறிது நேரத்தில் ஆரண் அடிக்கும் சத்தம் கேட்டது.மருமகள் அமுதா கதவை திறந்தாள். பாட்டி என கட்டிப்பிடித்துக் கொண்டாள் பேத்தி இந்து.ஊரில் இருந்து வந்த பாட்டி இந்துவை தூக்கி முத்தம் கொடுத்தாள்.அமுதா செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.தண்ணீரை குடித்த பாட்டி வெயில் தாக்கம் தணிந்தது. தணிந்தது கண்டு குளுகுளுப்பை உணர ஆரம்பித்தாள்.வீட்டைச் சுற்றி பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட மரங்கள்.பழைய குடியிருப்பாக இருந்தாலும் காற்று மாசு இல்லாமல் மரங்களில் நிழலும் காற்றும் சுகராகம் பாடியது.சருகுகள் உதிர்ந்து குப்பையாக இருந்தாலும், காற்று சுகமாக வந்து கொண்டு இருந்தது.மரம் வளர்ந்து இலை தளிர் முற்றி சருகு ஆனாலும் மக்கி உரமாகி பயன் தருகிறது.சருகு என்ற குப்பையாக நினைத்தாலும் முழுமை பெற்ற இலை சருகாகி மக்களுக்கு உதவி கலகல என்று சிரிக்கிறது. இந்துவின் சிரிப்பைப் போல்
தானியங்களை ஒன்பதாக பிரித்தனர். திசைகளை எட்டாகப் பிரித்தனர் கிழக்கு, மேற்கு, வடக்கு ,தெற்கு,வடகிழக்கு, தென்கிழக்கு, வட மேற்கு, தென்மேற்கு என எட்டாகப் பிடித்தனர். இசையை ஏழாகப் பிரித்தனர் ச ரி க ம ப த நி என்று. சுவையை ஆறாகப் பிரித்தனர். இனிப்பு, புளிப்பு ,உப்பு, துவர்ப்பு ,காரம், கசப்பு என்பன. நிலத்தை ஐந்தாகப் பிரித்தனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என. காற்றை நான்காகப் பிரித்தனர் கோடைக்காற்று, வாடைக்காற்று, தென்றல் காற்று, கொண்டல் காற்று எனறு நான்காகப் பிரித்தனர். இசையை மூன்றாகப் பிரித்தனர். இயல், இசை, நாடகம் என மூன்றாகப் பிரித்தனர். வாழ்வை இரண்டாக வகுத்தனர் அகம், புறம் என இரண்டு வகையாக. “ஒழுக்கத்தை” மட்டும் ஒன்றாக வைத்தனர். அதை உயிரினும் மேலாக வைத்தனர். தமிழன் பண்பாடு அதுவே ஆகும்.