Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

சங்க கால இலக்கண நூல் அகத்தியம் தொல்காப்பியர் இயற்றிய நூல் தொல்காப்பியம் அங்கம் மகிழ பத்துப்பாட்டு எட்டுத்தொகை அகநூல் குறிஞ்சி முல்லைப்பாட்டு பட்டினப்பாலை பங்கமில்லா புறநூல் நெடுநல்வாடை மதுரைக்காஞ்சி ஆற்றுப்படை ஐந்தும் பூத்த மலர்கள் சிங்கார குறள் தொடர்ந்து படித்தால் சிந்தனை ஊற்றாய் தொடர்ந்து ஊரும். தமிழ்த்தாய் மேனியில் சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி வளையாபதி குண்டலகேசி உமி தானியத்தை காப்பது போல் தாய் அணிந்து காப்பியத்தை காக்கிறாள் கமித்தல் தமிழனின் பண்பாட்டு குணம் காரியத்தில் துணிந்து செய்யும் உழைப்பு தமிழை மயிர்சிலிர்க்க ஒலிக்கச் செய்வான் தரணி புகழ் பரவச் செய்வான். சம்பந்த நாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் திருமுறை தந்த இறை பக்தர்கள் நம்மாழ்வார் பேயாழ்வார் பெரியாழ்வார் ஆண்டாள் கேசவனை பாடி தமிழையும் ஆண்டாள் கம்பர் எழுதிய கவிநய ராமாயணம் வில்லிபுத்தூர் ஆழ்வார் பாடிய மகாபாரதம் தம்பம் போல் காக்கும் கவசமாய் முருகனும் நெஞ்சில் பூத்த மலர்கள்.

Read More

அம்மா என்று அழைத்த போது அன்பு கொண்டு அள்ளிக் கொள்வாள் சும்மா ஒருநாளும் இருந்தது இல்லை சுமை தாங்கும் கல்லாய் இருப்பாள் இம்மை பிறப்பு இயங்க வைப்பாள் இன்னல் தாங்கி மேன்மை தருவாள்தம்மை தரணியில் தாழ்த்திக் கொண்டு பிறர் உயர ஏணியாய் இருப்பாள்.சிவகங்கை சீமையிலே வேலு நாச்சியார் சுதந்திர நாட்டிற்காக சிலிர்த்து எழுந்தவர்சிவமுக்தி தவகாசியில் ஜான்சி ராணியெனும் வீரமங்கை மணி கர்னிகா பிறந்தால் தவப்புதல்வன் இறந்த பின்பு தத்துபிள்ளை நாடாள வேண்டி ஆண் வேடமிட்டுசவமாகும் வரை போரிட்ட வீரமங்கை சவத்தை எரிக்கும் பெண் வைரமணி. கவிபாட கல்யாணம் துறந்த ஔவை கள்வன் அல்லவென போராடிய கண்ணகி கவிபாடி புனைந்த மங்கை பாஞ்சாலி இசைபாடி புகழ்பெற்ற மங்கை சுப்புலட்சுமி புவியில் ரேடியம் கண்டுபிடித்த மேரிகியூரி விளையாடி தங்கம் வென்ற மல்லேஸ்வரி புவிபுகழும் விண்வெளி கல்பனா சாவ்லா ஒருவழி செவ்வாய் செல்லும் சாரதா. வீரமங்கை விளைஞ்ச நம் நாடு வீறு நடை போடும் நாடு…

Read More

தூய்மை உள்ள இடத்தில் லட்சுமி பொறுமை உள்ள இடத்தில் சரஸ்வதிமுயற்சி உள்ள இடத்தில் பார்வதி முப்பெரும் தேவியர் இடத்தில் வெற்றி.வெற்றி தருவது நல்ல புத்தகம் வேதனை தருவது பழைய நினைவு சாதனை தருவது வைராக்கிய புத்திசாதிக்க வைப்பது மனத்துணிவு.கடல் அலை ஓய்வது இல்லை காற்று வீச மறப்பது இல்லை நேரம் யாருக்கும் காத்து இருப்பதில்லை மனிதன் மட்டும் சும்மா இருப்பதேன்.இயற்கை எப்போதும் இயங்கும் சக்திசீற்றம் வந்தாலும் இயங்குவது இயற்கை துயரில் மனிதன் ஒதுங்குவது ஏன்?எதிர்த்து நில் வாழவழி கிடைக்கும்.பணிவு இல்லையேல் பாதை கிடைக்காது உண்மை இல்லையேல் உயர்வு கிடைக்காது ஊக்கம் இல்லையேல் ஆக்கம் கிடைக்காது துணிவு இல்லையேல் துடிப்பு இருக்காது. மற்றவர் கருத்தை ஏற்க வேண்டும் மாற்றுக் கருத்தை சொல்லவும் வேண்டும் வெட்டிப் பேச்சே ஒதுக்க வேண்டும் வாழ்வை வேள்வி ஆக்க வேண்டும்

Read More

இயற்கையின் அற்புத படைப்பு இறைவன் இயக்கும் இயக்கம் புரியும் போது இன்பம் இதய வாசலைத் தொடும் இணைந்தே மனம் ஊஞ்சல் ஆடும். பனித் துளி பார்க்கும் போது பரவசப் பட்டு மனம் மகிழும் பனி மழை பார்க்கும் போது பரமன் உருவம் செய்தே மகிழும். இலை உதிர்ந்து பட்ட மரமாய் இருக்கும் மரங்கள் மனித எலும்புக்கூடு பனி பார்த்த மரங்கள் எல்லாம் பனி உடை அணிந்து மகிழும். இரத்த நாளங்கள் பரவி சதைகள் இணைந்து சதை பற்று பிடித்து வெற்று உடம்பில் பல வண்ண ஆடை உடுத்தி அழகு கூடும்.மழை கண்ட மரங்கள் எல்லாம் தண்ணீர் உறிஞ்சி இலை துளிர்க்கும் வண்ண பூவாடை தரித்து மகிழும் வரிசையாக அணிவகுத்து அழகு காட்டும்.கோடை வெயில் பட்ட மரங்கள் கோயிலைக் கண்டு தரிசனம் பார்க்கும்தலைநிமிர்ந்து தலையாட்டி குளிர் காயும் முக்கால கொடை இயற்கை அமெரிக்கா.

Read More

அகரத்தில் அமைந்த அமெரிக்க நாட்டில் மினசோட்டா தமிழ் சங்கம் அமைத்து சிகரம் தாண்டி வந்த தமிழர்கள் சிறப்புடன் செயல்பட தமிழ் பள்ளி நிகழ்வுகள் தொடங்கிய இன் நன்னாள் போற்றுதலுக்கு உரிய பொன்னாள் தமிழ் பகடுபெற்று பரவசம் கொள்ளும் நாள் பார்புகழ தமிழ்பள்ளி வளரும் நாள். சங்கம்வைத்து தமிழ் வளர்த்தவன் தமிழன் சகோதர உணர்வு கொண்டவன் தமிழன் சிங்கம் போன்ற சிறப்புடையவன் தமிழன் சிகரம் தாண்டி திரவியம் தேடி சங்கு ஊதி முழக்கம் இட்டு அமுது போன்ற தமிழ் சுவைபருகி வங்கம் தாண்டி தமிழ் பரப்பி வசந்த காற்றே சுவாசிப்பவன் தமிழன். உறவு பிரிந்து உள்ளம் நெகிழ்ந்து உறவு கொண்டு சங்கம் வைத்து குறள் பரப்பி நெறி வளர்த்து சகோதர சகோதரியாய் ஒன்று கூடி அறம் வளர்த்து திருப்பணி செய்து அன்பு கொண்டு உபசரிப்பவன் தமிழன் சிறப்பு பெற்ற தமிழர்கள் இணைந்து சீர்மிகு செயலாற்றும் இன்னால் பொன்னாள்.தாய்க் குலத்தை மதிக்கும் சகோதரர்கள் வாழ்க்கை…

Read More

ராட்டையைச் சுற்றி நூல் நூற்று கைத்தறி ஆடை அணிந்த காந்தி மாட்டை சுழற்றி செக்கிழுத்து சிறையில் இருந்து நாட்டை நேசித்த வ. உ. சி பாட்டை சுழற்றி பாட்டு இசைத்து வந்தே மாதரம் பாடிய பாரதி நாட்டை நேசித்து கதர் ஆடை அணிந்து அன்னியத் துணியை எரிந்ததும் தேசபக்தி. பருத்தியை விதைத்து பஞ்சை பிரித்து நூலாக்கி வண்ணம் கொடுத்து வகைப்படுத்தி முருக்கி உளர்த்தி எடுத்து நெய்து உடுத்த உறங்க இருக்க துவட்ட வருத்தி கையும் காலும் வேலையில் தறியில் துணி நெய்து எடுத்த வருத்தம் தெரியாமல் கொடுக்கும் போது விரும்பி அணிவதே இவர்களின் வாழ்வாதாரம். இன்று ஒரு கையும் காலும் வேலை செய்யும் எந்திரம் ஆகிய வென்று தானியங்கும் எந்திரம் ஆகிய உயர்ந்த கைத்தறி பட்டு மாகி சென்று பல இடங்களில் பெயருமாகி என்றும் கைத்தறி பாரம்பரிய உடையமாகி தன்னகரில்லா கவி பாடிய ஒட்டக்கூத்தர் வாழ்த்திய கைத்தறி என்றும் காலப்பெட்டகம்.

Read More

மானிடப் பிறவி அரிதிலும் அரிது மதித்து வாழ்தல் மதிப்பின் உயர்வு கானவன் கை பூமாலை போல் கசக்கி வாழ்ந்தால் நிம்மதி போகும் மானமான் போல் பெருமை கொள்ள ஒழுக்கப் பண்பில் சிறக்க வேண்டும் வானரி பசித்தாலும் புல் தின்னாது தனித்த குணத்துடன் அஞ்சாது வாழ்ந்தால்.அறக் கடவுள் அருகில் வருவார் அன்பை பொழிந்து நன்மைகள் செய்வார்உறவு பெருகும் உள்ளம் மகிழும் உண்மை வாழ்வு நல்லறம் மாகும் பிறவி பிறந்த பயன் அடையும் நித்தம் நித்தம் நல்லதே நாடும் பிறழ்தல் என்பது இல்லாமல் போகும் பிழை என்றும் விலகி ஓடும். பண்புள்ள மனிதரை நாடு போற்றும் பகைமை என்றும் இல்லாமல் போகும் கண்டவர் கண்ணுக்கு தெய்வமாய் தோன்றும் பூமாலை கழுத்தில் அணியாய் சேரும் சண்முகன் அருளும் நாளும் கூடும் சங்கடம் என்பது சந்தனமாய் மாறும் கண்டவர் வணங்கி இவர் போல யாரென்று சொல்லிப் போற்றி மகிழ்வர்.

Read More

சித்திரை மாத நிலவினிலே வான் என்னை எழுதத் தூண்டியது நிலவு புத்தியைத் தீட்டிப் பார்த்தபோது விண்ணில் நட்சத்திரக் கூட்டம் மின்னியது அத்தம் ஒளி கண்ட போது முழு மதி தவழ்ந்து வந்தது முத்திரை பதித்த முழு ஒளியில் மேகம் மறைத்து மறைத்து விளையாடி. மீனாட்சி சுந்தரேசர் வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சை பட்டு அணிந்து வானவர் வெண்சங்கு ஊதி வந்து அரியம் சிவனையும் கண்டு வணங்க ஆனந்தனை மக்களும் காணும் கூட்டம் வைகை ஆற்றில் வெள்ளமாய் பெருக கானல் வெப்பமும் மனமும் கலந்து பக்தி மனம் விண்ணைத் தொட…. சிவந்த சூரியன் மேகத்தில் மறைந்தான் தன் வெப்பத்தை மறைத்துக் கொள்ள குவலயம் குளிர்ச்சி கொடுக்க நிலா தன் முழுமையும் வெளியில் காட்ட கைவளம் கூட கோளம் முழுமையும் வெண்மை பரவிய நிலவு வெளிச்சம் சவரி சிலிர்க்க மனம் மகிழ மீனாட்சி கல்யாண சித்திரை திருவிழா

Read More

காவேரி நடந்து வந்தால் சோலை பாய்ந்து வந்தால் பசுமை புரட்சி நாடித் துடிப்பாய் பாயும் போது நாடு செழிக்கும் நன்மை பெருகும் ஓடும் தண்ணீரில் ஓடையில் குளிர்ந்து பாயும் தண்ணீரில் பயிர்கள் வளரும் காடும் கலமும் நிறையும் களஞ்சியது தானியம் ஆண்டுக்கு வந்து வரவாகும். ஓடிவரும் பாதை எங்கும் பசுமை செடியும் கொடியும் மரமும் மகசூழும் பாடிவரும் பறவை உண்டு உறவாடி மரத்தில் கூடுகட்டி குஞ்சு பொறிக்கும் நாடிவரும் வண்டின் ரிங்கார சங்கீதம் மரகத சேர்க்கை செய்து மகிழும் வாடி விடாமல் விவசாயி பார்த்து நீர் பாய்ச்சி அறுவடை செய்வர்கோடி நன்மை கிடைக்கும் நீர்வரத்தால் இயற்கை உலகுக்குக் கொடுத்த வரம் நாடி வரும் விவசாயி நலமுற்றால் நானில்லமே சிறக்கும் உணவு வரத்தால்….மூடி போட்டு அடைத்து வைக்க தானியம் அல்ல! தண்ணீர் தேங்காமல் பாடி ஓடிப் பாய்ந்து தமிழ் மண்ணில் நடந்தாய் வாழி காவேரி.

Read More

பூதம் தந்த பொற்காசுஒரு இளைஞன் காட்டு வழியாக சென்றான்.அவன் எதிரில் பூதம் ஒன்று வந்தது. பயந்தான் இளைஞன்.மனிதா! உன் வீட்டில் ஏழு கலையத்தில் தங்கம் வைத்திருக்கிறேன். எடுத்துக் கொள் என்றது பூதம்.வீட்டுக்கு ஓடி வந்து பார்த்தான் இளைஞன்.ஆறு கலயத்தில் முழுவதும் தங்கம் ஒரு கலயத்தில் பாதி தங்கம் இருந்தது.மனம் திருப்தி படாத இளைஞன் .செலவு செய்யும் மனம் இல்லாமல், ஆசைப்பட்டான் கலயத்தை நிறப்ப. தன்னிடம் மனைவியிடம் குழந்தையிடம் உள்ள நகைகளை எல்லாம் கலட்டி கலசத்தில் போட்டுப் பார்த்தான் நிறைய வில்லை.உழைத்து தங்கம் வாங்கி போட்டான். நிறைய வில்லை.ஒழுங்காக சாப்பிடாமல், கலசம் நிறைய வில்லை என்ற மன வருத்தத்தில் நோய்வாய்ப்பட்டான்.பூதத்தை மனதில் நினைத்து இப்படி ஆகிவிட்டேனே என வருந்தினான்.அவன் முன் பூதம் தோன்றியது.கொடுத்த பொற்காசுகளை நீயும் உண்டு. பிறருக்கும் கொடுத்திருந்தால் அது பெருகி இருக்கும்.உன் பேராசையால் உன்னிடம் இருந்தும் யாருக்கும் உதவாமல் போனது என்றது பூதம்.பேராசை இல்லாத மனிதனிடம் கொடுக்க கலசத்தை எடுத்துக்…

Read More