Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

குழந்தையாய் துள்ளித் திரிந்த வள் குமரியாய் கனவு கண்டவள் மருமகளாய் வரும் போது மகிழ்ச்சி மருட்சியுடன்வருகிறாள். குடும்பத்தில் உள்ளவர் குணங்களை குறுகிய நாளில் புரிந்து கொண்டு அவர்களுக்கு தகுந்தாற் போல் அனுசரித்து செல்ல தயாராகிறாள். குடும்ப நன்மைக்காக ஆழமாக சிந்தித்து குறைகளை நிறையாக்கி குதூகலப் படுத்துபவள் இம்சை படுத்தினாலும் அவர்கள் இடத்தும் இரக்கம் காட்டி இழுத்து போடுபவள். சலிக்காமல் உழைத்து சகசமாக இருப்பவள் சங்கடங்கள் தீர்க்கும் மூலிகையாய் இருப்பாள் மங்கல கரமாக எப்போதும் இருப்பாள் குத்து விளக்காய் பிரகாசிப்பாள். கோபமாக பேசுவாள் குணமாக பேசுவாள்குற்றம் சாற்றுவாள் குறைகளை சுட்டிக்காட்டுவாள் சுற்றத்தாருடன் நட்புடன் இருக்க செய்வாள் உறுதியான மனம் படைத்தவள் சாதிக்கப் பிறந்தவள்.

Read More

எதிர்த்து வா வாழ்க்கை என்னும்பயணத்தில் சிறகடி எதிர்த்து வா! பறந்த நான் திரும்பிய என் கண்களுக்கு பழைய சுவடி தெரிகிறது! முயற்சி என்னும் பாதையில் முட்கள் தான் எத்தனை? விலக்கி மேலே வரத்தான் விடியல்கள் எத்தனை…எத்தனை? மர இலைகள் உதிரும் மறுபடி அவை தளிரும் இடையில் வரும் தடங்கள் தவிடு பொடி ஆகும். மலர்களைப் பார் தெரியும் உதிர்வதற்கு முன் வித்தாகும் மழையைப் பார் புரியும் ஒவ்வொரு துளியும் பிறருக்காக கரை சேர் என்று கடல் அலைகள் நிற்குமா? எதிர்நீச்சல் போட்டு எதிர்த்து வா… புரியும்.

Read More

மண்வாசனை மணக்கும் பொன் விளையும் பூமியிலே பச்சை போர்வை போர்த்தி பரந்து விளைந்த பூமி. ஆடு மாடு மேய கோழிச்சண்டை போட நாய்கள் குறுக்கே ஓட வாத்து கூட்டம் நீந்த… கலை மேட்டில் கேலிப்பாட்டு கன்னியான ஒரு பாட்டு திருமணத்திற்கு நலுங்குபாட்டு இறந்தவுடன் ஒப்பாரிப்பாட்டு கூரை வீட்டில் வசித்தாலும் கூல் கஞ்சி குடித்தாலும் ஒருவர் குறையை கேட்டு அன்பு காட்டும் உள்ளம்.

Read More

ஆண்டவனின் படைப்பினிலே அற்புதவானத்துப் பெண்ம் பல கண்டேன் அண்டமெல்லாம் உருண்டையாய் ஆடிவரும் பந்தாய் இயற்கையின் சீற்றத்தால் சிந்திவரும் மழையாய் ஆறாய் குலமாய் வீசி வரும் தென்றலாய் பாலையும் சோலையும் குளிரும் பனியும் காடும் மலையும் என அற்புதமாய் படைத்தாய் பாலாவின் சுளையை பக்குவமாய் வைத்தது போல் பார்த்து பார்த்து பக்குவமாய் படைத்தாய் வானத்துப் பெண்ணுக்கு வட்ட நிலா பொட்டிட்டு புன்னகையில் பூத்திட புதுவெள்ளி நீ படைத்தாய் கிணற்றுத் தவளையாய் வீட்டிற்குள் இருக்காமல் பறந்து சுற்றிவர விமானம் படைக்க வைத்தாய் பழமொழி நீ படைத்தாய் பாரெல்லாம் பரவச் செய்தாய் அன்பென்ற மனதினில் அனைவரையும் இணைத்து விட்டாய்.

Read More

மாய உலகில் மயக்கம் நீக்கி மனதில் அமைதி தவமாய் மாற… தவத்தில் ஆற்றல் மண்ணில் படர்ந்து தன்னலமற்ற அன்பாய் மலர்ந்துமணக்கும். குதிரைக்கு முகத்திரை போடுவது போல மனதிற்கு கடிவாளம் போட்டுத் தடுத்து. தனக்காக வாழ்வதை தவிர்த்து விலகி பிறருக்காக வாழ சக்தி தோன்றும்.

Read More

மனிதா! நீ… தயங்கும் ஒஆணிவேர்வ்ஆணிவேர்ஆணிவேர்வொரு மணித்துளியும் தோல்வியை வரவேற்கும் தயக்கத்தை துறந்து தரணியில் உயர்வாய்! மனிதா !உன் பேச்சில் சிக்கனமும் செயலில் நிதானமும் ஒழுக்கத்தில் கண்ணியமும் இருப்பின் ஆன்மா…. உன்னை உயர்த்தி விடும். மனிதர் நீ கடமையைச் செய்ய தயங்காதே! செய்யச் செய்ய புடம் போட்ட தங்கமாக மிளிரும் அதுவே அறிவுக்கும் தெளிவுக்கும் ஆணி வேர்.

Read More

உதிரத்தை பாலாக்கி கொடுத்து வளர்க்கும் ஊட்டம் நிறைந்த பால் போல் தமிழ் பால் கொடுத்து நாடுஉயர தமிழில் கல்வி கற்பது நன்று பள்ளும், பண்ணும் தோன்றம் மண்ணில் தோன்றிய மூத்த தமிழ் பார் புகழும் வள்ளுவன் படைத்த புதையல் போன்ற பொக்கிசத் தமிழ் பகுத்து அறிந்து பண்பை வளர்க்கும் அன்புத் தமிழ் நம் தமிழ் இயற்கை எல்லாம் இயக்கித் தந்த இலக்கியத் தமிழ் காப்பியத் தமிழ் அண்டை நாட்டினர் என எண்ணாது அன்புடன் அனைத்தும் அன்புத் தமிழ் அறிவியல் விளக்கங்களை அறிந்து நுணுக்கங்களை ஆராய்ந்து அறிவித்த தமிழ் அறிவியல் தமிழ் எண்ணற்ற சிந்தனையை எடுத்துச் சொல்லி எழுதி வைத்த பழமைத் தமிழ் வானத்து கோள்களை அளந்து தெரிந்து சோதிடத்தில் நுழைத்த சோதிடத் தமிழ் உலகம் உருண்டை என்று ஆண்டாள் உணர்த்திச் சென்ற கோலத் தமிழ் உலக மொழியில் நிலைக்கும் மொழி பழைய மொழி தமிழ் மொழி.

Read More

அமிழ்தம் உண்டவர் அழியாதது போல்தொன்மை மொழி தமிழ் மொழிமேகத் திரை கொண்டு மூடினாலும்சூரியக் கதிராய் கிழித்து வரும் கடல்நீர் கரித்தாலும் மேகம்உண்டுமழை நீராய் கொட்டுவது போலகடினமான மரபுக்குள் ஒளிந்து இருந்துமக்கள் வாழ வழிகாட்டும் கரும்பின் சுவை மறைந்து இருக்கும்கடித்து உண்ண இனிப்பு ருசிக்கும்பார்க்கும்போது கடினம் தருவதுபடிக்கும் போது இனிமை தரும் முட்கள் பல செடியில் இருந்தாலும்மலரை முயன்று பறிப்பது போல்கடினம் என கருதாமல் சென்றுகல்வி மலரை பறிக்க வேண்டும் ஆழமான கிணற்றில் கூட முயன்றுஅடி நீரை எடுப்பது போலமுயற்சி என்னும் ஆழம் கொண்டுஅறிவு வளர்க்க முயற்சி கொள்வோம் பாடுபட்டு உழைக்கும் நெற்றித்தண்ணீர்நிலத்தில் உரமாய் விழுவது போல்தேடித்தேடி படிக்கும் தமிழ்கோடி கோடி பலன் தரும் அன்புடன்டாக்டர் செந்தமிழ்வாணி ச மல்லிகாஔவையார் மா மன்றம்நிறுவனத் தலைவி

Read More